ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

படம் : அரங்கேற்ற வேளை
பாடல் : ஆகாய வெண்ணிலாவே!
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்




ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல்
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்:
தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்:
இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்:
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்:
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்:
நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

பெண்:
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்:
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்:
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்:
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்:
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்:
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

0 comments: