மன்மத லீலையை வென்றார் உண்டோ

திரைப்படம் : ஹரிதாஸ்
பாடல் : மன்மத லீலையை வென்றார் உண்டோ
பாடகர்கள் : தியாகராஜ பாகவதர்
இசை : ஜி. ராமநாதன்




மன்மத லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
( ரம்பா….. சுவாமி ..)
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் … நான்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
மன்மத லீலையை வென்றார் உண்டோ

என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ
என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ
உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ…
உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ
உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ….
உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ – மனங்கவர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
--------------------------

நேயர் விருப்பம் பகுதியில் பழைய தமிழ் பாடல்கள் கேட்டிருந்த இனிய நண்பர் U2ameer அவர்களின் விருப்பமாக மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற இந்தப் பாடல் தரப்பட்டு இருக்கிறது. தங்கள் ஆதரவிற்கு நன்றி..

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

பாடல் : கண்ணுக்குள் நூறு நிலவா
படம் : வேதம் புதிது
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை : தேவேந்திரன்
பாடலாசிரியர்கள் : வைரமுத்து



பெண் : ப ப

ஆண் : தா தா

பெண் : நி நி

ஆண் : ச ச

பெண் : நி நி நி த ப ம க ரி ஸ நி

ஆண் : க ப ரி ஸ நி ரி க ம ப

பெண் : க ப ரி ஸ நி ரி க ம ப

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 1

பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி
ரகல பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
காத்யயினி பைரவி சாவித்ரி
நவ யெளவன சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...

ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 2

பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்
இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்
இவன் மனம் புரியாலயா

பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஆண் : ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

திரைப்படம் - கோயில் புறா
இசை - இளையராஜா
வரிகள்- புலமைப் பித்தன்
பாடியவர்கள் - பி.சுசீலா, உமா ரமணன்



அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா

சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா

தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

நினைத்தேன் வந்தாய் நூறு வயது

திரைப்படம் : காவல்காரன்
பாடல் : நினைத்தேன் வந்தாய்
பாடகர்கள் : P.சுசீலா, TM. சௌந்தரராஜன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி



ஒஹ்.....ஒஹ்...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவொ
சொல் தேனாக பாலாக பண்பாடவொ
மாலை நேரம் வந்துறவாடவொ
மாலை நேரம் வந்துறவாடவொ
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆஹா..
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஒஹொ..
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனொடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனொடை பாய்கின்ற சொர்க்கம் வா

மன்னன் தொளொடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரொடு பின்னி செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஒஹொ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்க்கள் என்னென்ன
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்க்கள் என்னென்ன
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...

=============================================

நேயர் விருப்பம் பகுதியில் பழைய தமிழ் பாடல்கள் கேட்டிருந்த இனிய நண்பர் dglmskannan அவர்களின் விருப்பமாக பழைய பாடல் தரப்பட்டு இருக்கிறது. இனியும் பழைய பாடல்கள் நிறைய தரவிருக்கிறோம், தங்கள் ஆதரவிற்கு நன்றி..

கண்ணன் ஒரு கைக்குழந்தை

திரைப்படம்: பத்ரகாளி (1976)
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: வாலி



கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூன்க்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக்
கொண்டு வரும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

(கண்ணன்)

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும்தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தம்மம்மா
வாழ்ந்திருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள் கொண்டு நீராடி
மைகுழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக் கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா

(கண்ணன்)

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

படம் : தென்றலே என்னை தொடு
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா



கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே

அந்திப்பகல்...கண்ணிமையில்...
உன்னருகே...ஹே

கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்


நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா

நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா

நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

கள்ளிருக்கும்...

பூவிது பூவிது

கையணைக்கும்...

நாளிது நாளிது

பொன்னென மேனியில்...

மின்னிட மின்னிட

மெல்லிய நூலிடை...

பின்னிட பின்னிட

வாடையில் வாடிய...

ஆடையில் மூடிய

தேன்...

நான்


கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே

பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே

கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்



ஆசை தீர வேண்டும் வரவா வரவா

நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா

ஆசை தீர வேண்டும் வரவா வரவா

நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா

பெண் மயங்கும்...

நீ தொட நீ தொட

கண் மயங்கும்...

நான் வர நான் வர

அங்கங்கு வாலிபம்...

பொங்கிட பொங்கிட

அங்கங்கள் யாவிலும்...

தங்கிட தங்கிட

தோள்களில் சாய்ந்திட...

தோகையை ஏந்திட யார்...நீ

கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே

அந்திப்பகல்...கண்ணிமையில்...உன்னருகே...ஹே

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

படம் : அரங்கேற்ற வேளை
பாடல் : ஆகாய வெண்ணிலாவே!
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்




ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல்
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்:
தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்:
இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்:
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்:
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்:
நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

பெண்:
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்:
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்:
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்:
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்:
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்:
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

நேயர் விருப்பம்

உங்களுக்குத் தேவையான பழைய, புதிய பாடல்கள், யாருடைய இசையானாலும், யாருடைய குரலானாலும், எந்த படமானாலும் எங்களுக்கு தெரிவித்தால் அதை தங்களுக்காக உங்கள் பெயருடன் இந்த வலையில் பதிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இந்த பதிப்பின் பின்னூட்டத்தின் வாயிலாக நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்

அல்லது isaianban3d@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி தெரியப்படுத்தலாம்

இப்படிக்கு,,,
உங்கள் அன்பு இசையன்பன்......

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

பாடல் : கண்ணாலே காதல் கவிதை
திரைப்படம் : ஆத்மா
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ், S.ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி



ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

(இசை) சரணம் - 1

பெண் : கடற்கரை தனில் நீயும் நானும்
உலவும் பொழுது

ஆண் : பறவையை போல் கானம் பாடி
பறக்கும் மனது

பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே

ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன துணையிலே

பெண் : இளம் மேனி உன் வசமோ

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

(இசை) சரணம் - 2

பெண் : உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்

ஆண் : மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்

பெண் : வலையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று

ஆண் : நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ ?

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

படம் : மௌனம் சம்மதம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா




கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா


தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

படம் : ராஜா கைய வச்சா
பாடல் : மழை வருது
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்




மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே



இரவும் இல்லை

பகலும் இல்லை

இணைந்த கையில்

பிரிவும் இல்லை

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா



மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே



கடந்த காலம்

மறந்து போவோம்

கரங்கள் சேர்த்து

நடந்து போவோம்

உலகமெங்கும் நமது ஆட்சி

நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி

உலகமெங்கும் அதற்கு சாட்சி

இளைய தென்றல் தாலாட்டு பாடும்

இனிய ராகம் கேட்போம் வா



வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மதுர மரிக்கொழுந்து வாசம்


படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா




பச்சரிசி மாவிடிச்சி
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சி
பாவு வச்சி பாவு வச்சி
சுக்கிடிச்சி மௌகிடிச்சி
மௌகிடிச்சி மௌகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேணும் காக்க வேணும் டோய்.........


மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

(மதுர மரிக்கொழுந்து)